ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சுதந்திர தேவி சிலை -USA


அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரத்துடன்(93மீற்றர்) கம்பீரமாக வானை நோக்கி உயர்ந்து நிற்கிறது. 

அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா? உலகுக்கு வெளிச்சமூட்டும் விடுதலை என்றும் சுதந்திர தேவி சிலை என்றும் அழைக்கப்படும் இச்சிலை ஒரு நட்புறவின் அடையாளம் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம் பிரான்சு அமெரிக்காவுக்கு வழங்கிய பரிசு தான் சுதந்திர தேவி சிலை. 

பண்டைய ரோமின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் லிபர்டாஸ் என்ற கடவுளச்சியின் வடிவம் போல விடுதலையை முன்னெடுத்துச் சென்று விளக்கொளி பரப்பும் தேவதை என்ற சிந்தனையில் சுதந்திர தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும் 7 நீட்சிகள் - 7 கடல்களை யும் 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம் அறிவையும்அதிலிருக்கும் தேதி ஜூலை 4 1887 என்று அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கும். 

151 அடி உயரமுடைய இச்சிலை 65 அடி உயரமுடைய அடித்தளம் 
மற்றும் 89 அடி உயரமுடைய பீடத்தின் மேல் பிரம்மாண்டமாக நிறுத்தப்பட்டது. இச்சிலையை 90.7 டன் செம்பும் 113.4 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் 1886 அக்டோபர் 28 அன்று சிலையை க்ரோவர் திறந்து வைத்தார். 

1902ஆம் ஆண்டு வரை இச்சிலை கலங்கரை விளக்காகவும் பயன்பட்டது. 
இச்சிலையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றை வளைவு படிக்கட்டுகள் மூலம் (354 படிக்கட்டுகள்) சுதந்திர தேவி சிலையின் கிரீடத்தை அடைய முடியும். 
ஏறி நின்று ரசிப்பது எத்தனை அற்புதமான விசயம். 

ஒரே நேரத்தில் அங்கிருக்கும் 25 ஜன்னல்கள் வழியாக 30 பேர் நியூயார்க் நகரைப் பார்வையிடலாம். பிரம்மாண்டமான இச்சிலையை அருகிலிருந்து பார்ப்பதே அலாதி சுகம் என்றால் அதன் உச்சியில் 

சிலையின் பீடத்தில் புதிய கொலாசஸ் என்ற எம்மா லாஸரஸின் கவிதை செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக இச்சிலையை வழங்கிய பிரான்சில் இதன் மாதிரி உருவம் வைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க சுதந்திர தேவி சிலை ஒரு ஆண்டுக்கு மூடப்படுகிறது 

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக August 11முதல் ஒரு ஆண்டு மூடப்படுகிறது. 

இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிலையை புதுப்பிக்க 2 கோடியே 75 லட்சம் டொலர் செலவு ஆகும் என அமெரிக்க உள்துறை அமைச்சர் கென் சலாசர் தெரிவித்தார். 

சுதந்திர தேவி சிலை 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையை புதுப்பிக்க மிகப்பெரும் ஏணிகள் மற்றும் எலிவெட்டர்கள் நிறுவப்படுகின்றன. சிலை மூடப்பட்டிருந்தாலும் சுதந்திர தீவு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டு இருக்கும். 

கடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர். 

கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திரம் மிக்க சிலை 21ஆம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது 

சுதந்திர தேவி சிலையின் 125 வது பிறந்தநாள் இன்று

வியாழன், 27 அக்டோபர், 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ். கணினி தொழில்நுட்பத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். கணினியை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு நவீனப் பரிமாணத்தைக் கொடுத்தவர்.


ஆப்பிள் கணினி நிறுவனத்தை உருவாக்கி அதனைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர். பில் கேட்ஸின் கணினிப் புலமைக்குச் சவால் விட்டவர்.

ஸ்டீவ் ஜாப்பின் மரணத்தை அவர் கண்டுபிடித்த இணையக் கைப்பேசி சாதனத்தின் மூலமாகத் தான் கோடானு கோடி உலக மக்கள் தெரிந்து கொண்டனர். அதைவிட பெரிய அஞ்சலி வேறு எதுவும் அவருக்கு இல்லை. ஸ்டீவ் ஜாப் கணினி உலகில் ஓர் அபூர்வமான அவதாரப் புருஷர்.


ஆப்பிள் கணினி நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் ஐபாட், ஐபோன், தட்டைக் கணினி போன்ற நவீனக் கணினி தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகம் செய்தார்.

2009 ஆம் ஆண்டில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் நீண்ட காலமாக அவர் கணையப் புற்று நோயினால் அவதிப் பட்டார். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 56. அப்போது அவருடைய சொத்து மதிப்பு 2400 கோடி மலேசிய ரிங்கிட்.

இந்த உலகின் தலைசிறந்த கணினி மும்மூர்த்திகளில் முதலிடம் வகிப்பவர் திம் பெர்ணர்ட்ஸ் லீ. இவர் இணையத்தைக் கண்டுபிடித்து அதை இலவசமாக உலக மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தார். அடுத்து வருபவர் பில் கேட்ஸ். இவர் உலகின் மூலை முடுக்கு, பட்டி தொட்டிகளில் எல்லாம் கணினியைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.
இளம் வயதில் ஸ்ஈவ் ஜாப்ஸ்
அதற்கு அடுத்து ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கைப்பேசிக்குள் இணையத்தையும் அந்த இணையத்திற்குள் உலகத்தையும் கொண்டு வந்தவர். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து விட்டாலும் அவருடைய கணினிச் சாகசங்கள் சாகாவரம் பெற்றவை. அந்தச் சாகசச் சாதனைகள் ஊழி ஊழி காலத்திற்கும் சிருங்காரம் பாடி கொண்டே இருக்கும் என்பது வெள்ளிடைமலை.

1972 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது முதல் தவணைச் சோதனையில் தோல்வி கண்டார். அதனால் படிப்புக்கு முழுக்குப் போட்டார்.

அதன் பின்னர், படுக்கப் பாய் கூட இல்லாமல் அவருடைய நண்பரின் அறையில் கீழே வெறும் தரையில் படுத்துத் தூங்கினார். இது நம்ப முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால், அது வரலாற்று உண்மை.


அவர் பிறந்தவுடன் அவருடைய பெற்றோர் அவரை வேறு ஒருவருக்குத் தத்து கொடுத்து விட்டனர். மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். அவர் தங்கியிருந்த இடங்களில் கிடைக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போய் விற்று தன் வயிற்றைக் கழுவிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரேகான் மாநிலத்தில் போர்ட்லேண்ட் நகரில் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஆசிரமம் இருந்தது. அங்கே இரவு நேர இலவச உணவுகளைப் பெற்று வாழ்ந்து வந்தார். அந்தக் காலக் கட்டத்தில் ஒரு வேளைச் சாப்பிட்டிற்கே அலைமோதி அவதிப பட்டிருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அதிர்ஷ்டவசமாக அத்தாரி எனும் நிறுவனத்தில் அவருக்குத் தொழில்நுட்ப உதவியாளராக வேலை கிடைத்தது. அங்கு வேலை செய்து கொஞ்சம் பணத்தைச் சேர்த்து கொண்டு தன் நண்பருடன் இந்தியாவுக்கு வந்தார்.

ஸ்டீவி ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம்
1974ல் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்தில் தங்கி இறை வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர், தலையைச் சுத்தமாக மொட்டை அடித்து, காவி உடை அணிந்து புத்த மதத்தைத் தழுவி, அமெரிக்கா திரும்பினார்.

மறுபடியும் அத்தாரி நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். 1976ல் இரு நண்பர்களின் துணையுடன் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

உலக கணினி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம். 1984ல் மெக்கிந்தோஸ் எனும் கணினி இயங்குதளத்தை உருவாக்கினார். இந்தக் கட்டத்தில் பில் கேட்ஸின் விண்டோஸ் இயங்குதளம் தாயின் வயிற்றுக்குள் தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தது.

ஆனால், 1986ல் ஆப்பிள் நிறுவனத்தில் சில பல பிரச்னைகள். ஸ்டீவ் ஜாப்ஸ் எளிதில் உணர்ச்சி வசப் படக் கூடியவர். தொட்டதற்கு எல்லாம் தொழிலாளர்கள் மீது எரிந்து விழுகிறார் எனும் புகார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

1985ல் ஏழு மில்லியன் டாலரில் நெக்ஸ்ட் எனும் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அங்கு இருந்தவாறு படிப்படியாகக் கணினித் தொழில்நுட்பங்களில் நவீனத் தன்மைகளை அறிமுகம் செய்தார். 1986ல் பிக்சர் திரைப்பட நிறுவனத்தை 30 மில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கினார்.

அந்த நிறுவனம் தான் பின்னர், Toy Story (1995), A Bug’s Life (1998), Toy Story2 (1999), Monsters (2001), Finding Nemo (2003), The Incredibles (2004), Cars (2006), Ratatouille (2007), WALL-E (2008), Up (2009), Toy Story3 (2010) ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஆகும்.

1996ல் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்சை திரும்ப அழைத்துக் கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அவர் விலகும் போது அவருடைய ஆண்டுச் சம்பளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அமெரிக்க டாலர்தான். உண்மைதான்.

ஆனால், அப்போது அவருடைய சொத்து மதிப்பு, மலைக்க வேண்டாம் 2400 கோடி மலேசிய ரிங்கிட். அவர் அமெரிக்காவிலேயே 42வது பணக்காரராக விளங்கினார்.

இவருக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். அவர் இறந்ததும் ஆப்பிள் நிறுவனம் இப்படி இரங்கல் செய்தியை வெளியிட்ட்து. ‘Apple has lost a visionary and creative genius, and the world has lost an amazing human being.’ (ஆப்பிள் நிறுவனம் ஓர் உருவாக்க பேரறிவாளனை இழந்து விட்டது. ஆனால், இந்த உலகம் ஓர் அற்புதமான மனிதனை இழந்து விட்டது)

’நவீன உலகின் முகத் திரையில் மாற்றங்கள் செய்த மாமனிதர்’ இந்த ஸ்டீவ் ஜாப் என்று உலக நாளிதழ்கள் முதல் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளன.

படுக்கப் பாய் இல்லாமல் தவித்த ஒரு தனி மனிதன் உலகப் பணக்காரன் ஆனது ஒரு சரித்திரம் தானே!

பில் கேட்ஸ்


உலகின் மிக மிகப் பெரிய பணக்காரர் யார்? சின்ன குழந்தை கூட ‘பில் கேட்ஸ்’ என்று சொல்லி விடும். அந்த அளவிற்கு புகழ் பெற்றவர். தேங்கி நிற்கும் திசை எல்லாம் பில்கேட்ஸ். இறவாப் புகழின் அடையாளங்கள். வான விதானத்தில் ஊழியூழிக் காலத்திற்கும் வர்ணஜாலம் காட்டும் மந்திரச் சொல்.

கடந்த 13 ஆண்டுகளாக உலகப் பணக்காரப் பட்டியலில் முதல் இடம். பாரிஜாத நினைவுகளான அற்புத வாழ்க்கை. சென்ற வருடம் Slim Helu எனும் மெக்சிகோ நாட்டுக்காரர் அந்தப் பதவியைப் பறித்துக் கொண்டார். சென்ற வருடம் என்றால் 2009ஆம் ஆண்டின் கணக்கு. அதுவும் ஒரு சில கோடிகள் வித்தியாசத்தில் பதவி பறிபோனது.

சில கோடிகள் என்று சொன்னால், அவர்களுடைய Billionaires மொழியில் 900 கோடி டாலர்கள். இருவருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம். அது ஒன்றும் பெரிய காசு இல்லை. ஒரு கோடி, இரண்டு கோடி என்பதெல்லாம் அவர்கள் விஷயத்தில் ஒன்றுமே இல்லை. அரைக் கிலோ மாவு வாங்கி அரைத்து மசாலா தோசை சுட்டுச் சாப்பிட்ட கதைதான்.

கோடிக் கோடியாக பணம்


பில்கேட்ஸ் கீழே கிடக்கும் பத்து காசைக் குனிந்து எடுப்பதற்குள், அவருடைய வங்கிக் கணக்கில் 3250 ரிங்கிட் சேர்ந்து விடுகிறது. அவர் கணக்கில் எப்போதும் 20,000 கோடி ரிங்கிட் இருந்து கொண்டே இருக்கும். அவ்வளவு பணம். ம்ம்ம்… என்ன செய்வது. கொடுத்து வைத்த மகாராசன்.
Man of the Year from Time magazine

இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி. தெரியவில்லை! பில்கேட்ஸ், சிலிம் ஹேலு அல்லது லட்சுமி மிட்டல் போன்றவர்களிடம் உள்ள பணத்தில் ஒரே ஒருவரிடம் உள்ள பணத்தை மட்டும் நம்முடைய மலேசியாவிற்குக் கொண்டு வருகிறோம்.

அட… சும்மா ஒரு பேச்சுக்குத்தான். அவர்கள் என்ன ‘இந்தா எடுத்துக்கோ’ என்று கொட்டியா கொடுத்துவிடப் போகிறார்கள்.

கிடைக்காத ஒன்றை கற்பனை செய்து பார்ப்பதில் என்னய்யா தப்பு. அந்தப் பணத்தை அப்படியே நம்முடைய ஒரு ஒரு ரிங்கிட்டாக மாற்றி வரிசையாக அடுக்கி வைக்கிறோம்.

கோலாலம்பூரிலிருந்து லண்டன் வரை அடுக்கி வைத்துவிடலாம். அப்புறம் இன்னொருவருடைய பணத்தை அடுக்கினால், உலகத்தையே ஒருமுறை சுற்றி வந்து விடலாம்.

அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல்


அந்த அளவிற்குப் பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். கணக்கு போடுங்கள் அவர்களில் ஒருவர், அவருடைய பணத்தை அவரே எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். யாரையும் துணைக்குச் சேர்க்காமல், அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல் ஆசை ஆசையாக எண்ணுகிறார்.

எவ்வளவு காலம் பிடிக்கும். ஈரப்பசைக்கு இறைவன் கொடுத்த நாக்கு இருக்கவே இருக்கிறது. சும்மா ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். விடையைப் பிறகு சொல்கிறேன்.

அதெல்லாம் சரி. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு இந்த மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள். என்னதான் செய்யப் போகிறார்கள் என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

அவர்களுடைய பணத்தை நிர்வாகம் செய்ய அவரவர்களுக்கு தனிப்பட்ட நிதி அமைச்சர், இரண்டு மூன்று துணையமைச்சர்கள், நூற்றுக் கணக்கான பொருளாதார நிபுணர்கள் என்று ஒரு பெரிய கணித மேதைகள் பட்டாளமே இருக்கிறது. இந்தப் பண முதலாளிகள் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல தான தர்மமும் செய்தும் வருகிறார்கள். அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

மலேசிய அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் Budget எனும் வரவுசெலவு கணக்குப் போடுகிறது. தெரிந்த விஷயம். இந்த ஒரு நாட்டின் வரவுசெலவு பணத்தை இரண்டு உலகப் பணக்காரர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும்;

அவர்கள் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பில்கேட்ஸ், சிலிம் ஹேலு, லட்சுமி மிட்டல், Warren Buffet ஆகிய இந்த நால்வர்தான் அந்த ஜாம்பவான்கள்.

இவர்கள் மனசு வைத்தால்

இந்த நால்வரும் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நான்கு நாடுகளின் ஓராண்டு வரவுசெலவு பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மனசு வைத்தால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டு விடலாம்.
Bill Gates as a boy

தந்திரங்கள் நசுக்கல்கள் சரி, விஷயத்திற்கு வருவோம். உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் ஆவதற்கு பில் கேட்ஸ் என்னென்ன தந்திரங்களைக் கையாண்டார், என்னென்ன நசுக்கல் வேலைகளைச் செய்தார், என்னென்ன கீழறுப்பு வேலைகளைச் செய்தார் என்பதைப் பற்றி ஒரு பெரிய பில்கேட்ஸ் இராமாயணத்தையே எழுதி வைத்திருக்கிறார்கள்.

பல மொழிகளில் பல புத்தகங்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது மட்டும் அரிச்சந்திர ரகசியம். உலகின் பல நாடுகள் அவர் மீது வழக்குகள் போட்டன. கொரியா, தைவான், ஜப்பான், பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் அந்த வழக்குகளில் வெற்றியும் பெற்றன. கோடிக் கோடியாக நஷ்டயீடும் கொடுக்கப்பட்டது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து

ஆகக் கடைசியாக, Auto Desk எனும் மென்பொருள் உரிமையாளர்களின் வழக்கு. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனையே கடித்துவிட்டதாக செய்தி. எல்லாம் அதே அமெரிக்காவில் தான்!

பில்கேட்ஸ் பிறந்த அதே தாய்மண்ணில்தான் அவருக்கு அத்தனை ஆலாபனைகள். கணினினியை இயங்க வைக்கும் செயல்பாட்டை operating system எனும் செயலம் என்கிறோம்.

ஆக, அவருடைய Windows Operating System எனும் செயலத்தையே ஒன்று இல்லை பார்த்துவிட, ஒரு சில கணினி மண்டைகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

அவர் பிறந்த அமெரிக்காவிலேயே பலமான எதிர்ப்புகள். பில் கேட்ஸ”ம் சமாளித்து வருகிறார். இப்போது தொட்டதற்கு எல்லாம் virus வந்துவிட்டது. இந்த வைரஸ்களை உருவாக்கித் தயாரித்து உலா விடுபவர்கள் பெரும்பாலும் பில் கேட்ஸை எதிர்ப்பவர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எதிர்ப்பவர்கள். விண்டோஸ் செயலத்தை எதிர்ப்பவர்கள்.

வைரஸ் என்பது ஒரு சின்ன மென்பொருள். இணையத்தின் வழியாக உங்கள் கணினிக்குள் நுழைகிறது. குட்டி போடுகிறது. பேரன் பேத்திகள் எடுத்து பல தலைமுறைகளை உருவாக்கிக் கொள்கிறது. கடைசியில் கணினியைச் செயலிழக்கச் செய்து சமாதி கட்டுகிறது. அவ்வளவுதான்! அதற்கு மேல் உங்கள் கணினியை Format எனும் சுத்திகரிப்புச் செய்தால்தான் மறுபடியும் இயங்கச் செய்ய முடியும்.

வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் செயலத்தை மட்டுமே தாக்குகின்றன

இந்த வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் செயலத்தை மட்டுமே தாக்குகின்றன. Linux செயலத்தைத் தாக்குவதில்லை. இந்த விஷயம் பலருக்குத் தெரியாது. ஏனென்றால் லினாக்ஸ் ஓர் இலவசமான செயலம்.

செல்லப் பிள்ளை. உலகமெங்கும் பரவியுள்ள கணினி நிபுணர்கள் இதற்கு நிறைய உதவிகள் செய்கிறார்கள். நிறைய மென்பொருட்களை எழுதிக் கொடுக்கிறார்கள்.

சின்னப் பிரச்னை என்றாலும் உடனடியாகத் தீர்த்து வைக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்தக் கட்டுரையாளரும் ஒரு லினாக்ஸ் ஆர்வலர்தான். Linux Ubuntu செயலத்தைப் பயன்படுத்துகிறேன்.

ஆக, உலகமே கணினி மயமாக மாறிவிட்டது. மாறி வரும் இந்தக் கணினி உலகில் அதிகம் விரும்பப்படுகிற அதே சமயத்தில் அதிகம் வெறுக்கப்படுகிற மனிதர் யார் என்று கேட்டால், அவர்தான் இந்த பில்கேட்ஸ்.



உலகில் எண்பது விழுக்காட்டுக் கணினிகள் இவருடைய விண்டோஸ் செயல்பாட்டினால்தான் இயங்குகின்றன. எஞ்சியவை லினாக்ஸ், Macintosh முறையில் இயங்குகின்றன. காலத்தைக் கலைத்த கணிணினிக் கலை தெய்வத்திற்கு இணையான ஒரு நிலைக்கு கணினி வந்துவிட்டது. இப்படி சொல்வதற்காக மன்னிக்கவும்.

இருந்தாலும், உண்மை அதுதானே. எல்லாமே கடந்த 25 ஆண்டுகளில் நடந்து முடிந்தவை. கணினியைத் தெய்வமாக நினைத்துப் கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு வளர்ந்து அஃது எங்கேயோ போய்விட்டது.

கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தில் போய் உட்கார்ந்தும் விட்டது. காலத்தைக் கலைத்து நிற்கிறது கணிணினிக் கலை. ‘அதுவன்றி அணுவும் அசையாது’ என்பார்கள்.
Bill Gates Daughter

அதுபோல தெய்வத்திற்கு இணையாகப் பேசும் அளவிற்கு கணினியின் முக்கியத்துவம் வளர்ந்துவிட்டது. கணினி இல்லை என்றால் உலகமே நின்று போகும் அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலைக்கு கணினியைக் கொண்டு வந்ததில் பில்கேட்ஸூக்கு முக்கிய பங்கு உண்டு. அதை நாம் மறுக்கவில்லை.

பேராசை கலந்த வெறியுணர்வு

இருந்தாலும் பாருங்கள், உலகிலுள்ள அத்தனை பேரும் தன்னுடைய விண்டோஸ் செயல்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்; அத்தனை பேரும் Microsoft நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் எனும் பேராசை கலந்த வெறியுணர்வுதான் அவர் மீது பலத்த பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வேறொன்றுமில்லை. இப்பேர்ப்பட்ட வளர்ச்சியை அவர் ஒரு கால் நூற்றாண்டுக்குள் சாதித்தார் என்பதுதான் இன்னொரு பெரிய விஷயம். உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய பில்கேட்ஸ், ‘நம்பர் ஒன்’ பணக்காரரானது நியாயமான விஷயம்.


மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். 1970களில் கணினித் தொழில்நுட்பம் பிரபலமாகி வந்தக் காலக்கட்டம். பில்கேட்ஸ் தன்னுடைய பள்ளியிலேயே இலவசமாக கணினியைப் பயன்படுத்த முடிந்தது. அந்தச் சமயத்தில் கணினி பற்றி முழுமையாக விஷயம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.

பெரிய மேதைகள் என்று பீற்றிக் கொண்டவர்கள் எல்லாம் இருக்கிற புத்தகங்களை வைத்துக் கொண்டு உலப்பியவர்கள். ஒரே சேற்றில் ஊறிய மட்டைகள்.

அந்தச் சமயத்தில் பில் கேட்ஸ், நண்பர்கள் சிலரைத் துணைக்கு வைத்துக் கொண்டு சின்னச் சின்ன Programs எனும் மென் பொருள்களை எழுதி வந்தார். அவர் பிறந்தது 1955ல். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பம்.

பதினாறு வயதில்

பதின்மூன்று வயதிலேயே கணினி ஆர்வம் வந்துவிட்டது. பள்ளிக்கூட கணினிகளின் முன் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்கு. பதினாறு வயதில் தன் நண்பருடன் சேர்ந்து Traf-O-Data என்ற ஒரு சின்னக் கம்பெனியைத் தொடங்கினார்.


அவர்கள் பகுதியிலிருந்த நிறுவனங்களுக்கு மென் பொருள்களை எழுதித் தந்து சின்னது சின்னதாகச் சம்பாதித்தார்கள். இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு மென்பொருள் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அதில் ஒரு பிரச்னை. கிடைக்கும் பணத்தைப் பிரித்தால் குழுவில் இருக்கும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. யாராவது ஒருவர் குழுவிலிருந்து வெளியேற வேண்டும்.

சரி! யாரை வெளியே தள்ளுவது. கடைசியில் பில்கேட்ஸை ஓரங்கட்ட முடிவு செய்தார்கள். என்னையும் என் முடிவையும் மாற்ற முடியாது உலக நாயகன் பில்கேட்ஸ் கோபப்படவில்லை.

சர்வ சாதாரணமாகச் சொன்னாராம். ‘நான் இப்போது வெளியே போகிறேன். என் தேவை ஏற்படும் போது என்னை மறுபடியும் அழைப்பீர்கள். சும்மா வரமாட்டேன். இந்தக் குழுவுக்குத் தலைவனாகத்தான் வருவேன். அதிலும் கொஞ்சம் பிரச்னை.

Bill Gates family

நான் ஒரு முறை தலைவனானால் அதன் பின்னர் நானேதான் தலைவனாக இருப்பேன். என்னையும் மாற்ற முடியாது. என் முடிவையும் மாற்ற முடியாது’. பில்கேட்ஸின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட நண்பர்கள் அவரை வெளியே அனுப்பாமலேயே சமாளித்துக் கொண்டார்கள்.

உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக

பில்கேட்ஸின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் இன்று அவரை உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக உயர்த்தி வைத்திருக்கிறது. இப்படித் தொடங்கிய பில்கேட்ஸின் வாழ்க்கை கணினி கணினி என்றே கழிந்தது. மனம் வேறு எங்கும் அலை பாயவில்லை.

கணினி, அதன் மென் பொருள், அதில் கிடைக்கும் பணம். இவற்றில் மட்டுமே மனம் ஈர்ந்து நின்றது. நாமும் அவரைப் போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் எனும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

திடீரென அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் படித்த அதே பள்ளிக் கூடத்திற்கு ஒரு சம்பளப் பட்டியல் தயாரித்துக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் அவரைக் கேட்டுக் கொண்டது. அவர்கள் அப்படி ஒன்றும் பெரிய கெட்டிக்காரர்கள் இல்லை. இருந்தாலும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. உல்லாசமாகத் தொடங்கிய வேலை உற்சாகமாக முடிந்தது. அதன்பின்னர் பல புதிய வேலைகள் அவர்களைத் தேடி வந்தன. அதிஷ்ட தேவதை அவர்களைப் பார்த்து சிரித்தாள்.


பணப் பசியும் தீர்ந்தது. அறிவுப் பசியும் தீர்ந்தது. பின்னர் சிறிய அளவில் கணினிகளைச் செய்தார்கள். அவற்றிற்கு தேவையான மென்பொருள்களையும் அவர்களே எழுதினார்கள். விற்றார்கள். நன்றாகப் பணம் சம்பாதித்தார்கள். 1973ல் பில்கேட்ஸுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

பணம் சம்பாதிக்க வேண்டும்

படித்து பெரிய பதவிக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம்கூட இல்லை. நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. 1975ஆம் ஆண்டு தங்களுக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்று மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

Micro Computer Software என்பதே Microsoft ஆனது. அப்போது மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். பிலகேட்ஸின் திறமையினால், அவர்களுடைய தயாரிப்புகள் சந்தையில் பற்றிக் கொண்டு விற்றன.

அந்த இளைஞர்கள் அனைவருமே இப்போதைக்கு உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.


பட்டி தொட்டிகள் கணிணினிப் பெட்டிகள் அப்புறம் ஏகப்பட்ட திறமைசாலிகள் புதிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தனர். 1980 ஆம் ஆண்டுகளில் கணினி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது.

BM நிறுவனம் Personal Computer எனும் நவீனக் கணினிகளை உருவாக்கியது. பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தி வந்த காலம் மாறிப் போனது. பட்டி தொட்டி எல்லாம் கணினிகள் போய்ச் சேர்ந்தன.

வியாபாரத் தந்திரங்கள்

International Business Machines எனும் நிறுவனத்தின் சுருக்கமே IBM ஆகும். அந்தக் காலத்தில் உலகத்திலேயே அதிகமான கணினிகளைத் தயாரித்த நிறுவனமாகும். அந்த நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் கைகோத்தது. அப்பொழுதே வியாபாரத் தந்திரங்கள் தொடங்கிவிட்டன. எழுதிய மென்பாருள்களை முழுமையாக ஒப்படைப்பதில்லை.

100க்கு 80 விழுக்காடு கொடுப்பது. மீதியைப் பிடித்துக் கொண்டு இழுத்தடிப்பது. அசல் மென்பொருளுக்குப் பதிலாக நகலைக் கொடுப்பது. தங்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது. இப்படி பலப்பல சாக்கு போக்குகள். பலருக்கு பில்கேட்ஸ் மீது பொறாமை. வயிற்றெரிச்சல் என்றுகூட சொல்லலாம்.


Xerox நிறுவனத்தின் மென்பொருளையும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளையும் திருடி ‘காப்பி’ அடித்து, அதன் மூலம் தனது விண்டோஸ் மென்பொருளை விற்பதாகக் குற்றச்சாட்டு. அவருடைய நடவடிக்கைகள் உலகம் பூராவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

பில்கேட்ஸ் தன் பண பலத்தைப் பயன்படுத்தி மற்ற சின்ன போட்டியாளர்களை நசுக்கிவிடுவதாகக் குற்றச்சாட்டு வேறு. அந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகவே தெரிய வருகிறது. ஏனென்றால், இப்போதைய கணினி உலகில் மைக்ரோசாப்ட் வைத்ததுதான் சட்டம்.

பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை

பலவிதமான வியாபாரத் தந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது. ‘விண்டோஸ்’ பயன்பத்துபவர்கள் அதன் பிசினஸ் வலையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைமையும் வந்துவிட்டது. அவர் உருவாக்கிய Bill Gates Melinda Foundation நிறுவனத்தின் செயல்பாடுகளும் முழுமையான சேவை நோக்கம் கொண்டவை அல்ல என்றும் வாதம் செய்கிறார்கள்.


பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை 7 பில்லியன் டாலர்களுக்கு அறப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், இவை அனைத்தும் சேவை நோக்கத்தில் செய்யப்படுகிற உதவிகள் இல்லை.

பல பிசினஸ் தில்லுமுல்லுகள் பின்னிப் பிணைந்துள்ளன என்று பில்கேட்ஸின் எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். பில்கேட்ஸின் தயாரிப்புகள் எந்த எந்த நாடுகளில் அதிகம் விற்பனையாகிறது என்பதைப் பொருத்தே அந்த அறக்கட்டளையின் கவனமும் ஈடுபாடும் அமைகிறது என்று வாதிடுகிறார்கள்.

இந்த வகையில் அந்த நாடுகளின் பெரும்புள்ளிகளை பில்கேட்ஸ் தன் வசப்படுத்திக் கொள்கிறார். அப்புறம் தன் பிசினஸ் விரிவாக்கத்திற்கு அவர்களை உச்சி முகர்ந்து கொள்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

குறிப்பாக, ஆப்ரிக்காவைச் சொல்லலாம். அஃது எந்த வகையில் உண்மை என்பது கேள்விக்குறியே! அகலப்பணி செயல் தொழில் பில்கேட்ஸுக்கு வேகமாக கார் ஓட்டுவதென்றால் கொள்ளை ஆசை.

With Queen Elizabeth

படிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் கார்களை ஓட்டி, பலமுறை பிடிபட்டு சிறைக்குப் போய் கம்பியும் எண்ணியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில், அந்தக் கட்டத்தின் எல்லாப் பகுதிகளும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்குமாம்.

ஒரே ஒர் இடத்தைத் தவிர! அந்த இடம் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரான பில்கேட்ஸ’ன் கார் நிற்குமிடம். அந்தப் பகுதியை மட்டும் பணியாளர்களால் எப்போதுமே சுத்தம் செய்ய முடிந்ததில்லை.

கார் நிறுத்துமிடம் எப்போதுமே காலியாகவே இருக்காது
பில்கேட்ஸ் எப்போது வருகிறார் எப்போது போகிறார் என்று யாருக்குமே தெரியாதாம். இருபத்து நான்கு மணி நேரமும் அலுவலகத்தில்தான் இருப்பாராம். அவருடைய கார் நிறுத்துமிடம் எப்போதுமே காலியாகவே இருக்காது. ஆகவே, அந்த இடத்தைச் சுத்தப் படுத்தவே முடியாதாம்.

Mrs.Ambiga - The First Woman to become the President of Malaysian Bar Council

வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரமெல்லாம் பில்கேட்ஸ், அலுவலகத்தில் அவருடைய கம்பியூட்டர் முன் இருப்பார். அவருடைய அலுவலக அறை எப்ப்டி இருக்கும்? அதை அவரே சொல்கிறார். கேளுங்கள். ‘என்னுடைய அறையில் பேப்பர்கள் நிறைய இருக்காது. என் வேலைகள் எல்லாம் கம்பியூட்டர் மூலம்தான்.

என் மேசையில் மூன்று கம்பியூட்டர்கள் இருக்கும். இடப்பக்கம் உள்ள திரையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள். நடுத்திரையில் நான் படித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள். வலதுபக்கத் திரையில் இண்டர்நெட் சமாச்சாரங்கள்.

எங்கள் அலுவலகம் மின்னஞ்சல் மூலமாகத்தான் இயங்குகிறது. எனக்கு தினம் நூறு மின்னஞ்சல்கள் வரும். செய்தித் தாள்களைக்கூட இணையத்தில்தான் படிப்பேன். கூட்டங்களுக்குச் செல்லும் போது சின்ன கணினியை எடுத்துச் செல்வேன். அதில்தான் குறிப்புகளை எழுதிக் கொள்வேன்’ என்கிறார் பில்கேட்ஸ்.

நமக்கும் சகோதரர் பில்கேட்ஸூக்கும் எந்தவிதமான மனத்தாக்கமும் இல்லை

அவருடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 52000 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 28000 பேர் இந்தியாவிலிருந்து போனவர்கள். அவர்களில் 26000 பேர் தமிழர்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

PC Fair at Ipoh, Malaysia

தமிழர்களின் கணினித் திறமையைப் புரிந்து வைத்திருக்கும் பில்கேட்சுக்கு ஒரு சபாஷ்! நமக்கும் சகோதரர் பில்கேட்ஸூக்கும் எந்தவிதமான மனத்தாக்கமும் இல்லை. என்ன அவருடைய Windows XP அல்லது Vista மென்பொருள்களை, சில சமயங்களில் காசு போட்டு வாங்கிப் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் காசு போடாமல் திருட்டுத்தனமாக அர்ச்சனை செய்கிறோம்.

பிடிபட்டால் சில நாட்களுக்கு கம்பி எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவுதான்! பணமே வா படிப்பே போ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பத்துப் பதினந்து தலைமுறைகளுக்கு சம்பாதித்தும் விட்டார். சம்பாதித்ததில் தானம் செய்கிறார்.

தர்மம் செய்வதில் வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடு மட்டும் இல்லாமல் இருந்தால் நல்லது. The Road Ahead, Business @ The Speed of Thought என இரண்டு புத்தகங்களை பில்கேட்ஸ் எழுதியிருக்கிறார். இதுவரை தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதவில்லை.

கடந்த காலத்தைப் பற்றி எழுதுவதில் என்ன இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி எழுதத்தான் எனக்கு ஆசை’ என்கிறார். இருந்தாலும் அவரைப்பற்றி மற்றவர்கள் 6000 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்கள்.

அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நூறு பேர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். அப்படி பட்டம் வாங்கியவர்களுக்கு அமெரிக்காவில் விருந்து வைத்திருக்கிறார். பணம் பரிசு என்றும் கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி யாராவது புத்தகம் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தால் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க! முடிந்தால் நீங்களும் ஒரு புத்தகம் எழுதி அனுப்பிப் பாருங்கள். அவருக்குத் தமிழ்மொழி தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று. ஒரு புத்தகம் எழுதி அனுப்பினாலும் ஆயிரம் டாலர்கள்தான். ஆயிரம் புத்தகங்கள் எழுதி அனுப்பினாலும் ஆயிரம் டாலர்கள்தான்.

Tamil girl playing with computer in Malaysia

எப்படி உங்கள் வசதி. பில்கேட்ஸ் – மெலிண்டா திருமணம் 1.1.1994ல் நடைபெற்றது. ஹவாய்த் தீவு ஒன்றை மொத்தமாக வாடகைக்கு எடுத்து பல மில்லியன் டாலர் செலவில் ‘சிக்கனமாக’ நடை பெற்ற கல்யாணம். இவர்களுக்கு இப்போது ஜெனிபர், ரோரி, அட்லே என் மூன்று குழந்தைகள்.

கல்யாணத்திற்கு நூறு மில்லியன் டாலர்கள்

இருந்தாலும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் வீட்டில் நடந்த கல்யாணத்தை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், அவருடைய பிள்ளை கல்யாணத்திற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக தகவல்!

உலகில் இதுவரையில் யாரும் இவ்வளவு பணம் செலவு செய்து கல்யாணத்தை நடத்தவில்லையாம். வளருட்டும் லட்சுமி மிட்டல் இரும்பு வியாபாரம்

பில்கேட்ஸ் சம்பாதித்த பணத்தை எய்ட்ஸ் நிவாரணம், மலேரியா ஒழிப்பு, கல்வி போன்ற நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கிறார். ‘கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ எனும் நன்கொடை நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

இதுவரையில் 850 கோடி ரிங்கிட்டை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பண உதவி கேட்கிறார்கள். பலருக்கு கிடைத்திருக்கிறது.

பில் கேட்ஸின் மின்னஞ்சல் முகவரி: bgates@microsoft.com நாமும் கேட்டுப் பார்க்கலாம். கேட்பதில் தப்பில்லை. ஆனால், கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை. நியாயமான கோரிக்கையாக இருந்தால் கிடைக்கலாம். கிடைத்தால் பில் கேட்ஸ’ன் மின்னஞ்சல் முகவரி தந்த என்னை மறந்து விடாதீர்கள்.

Blogger KSMuthukrishnan's
grand children using I Pod for calculation

சரி! 20,000 கோடி ரிங்கிட்டை ஒவ்வொரு ரிங்கிட்டாக எண்ணினால் எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற விஷயத்திற்கு வருவோம். விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா.

நானும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். மூளை குழம்பிப் போனது. வீட்டிலுள்ள கணினியைப் போட்டுத் தட்டிப் பார்த்தேன். 6341 வருடங்கள் என்று பதில் வருகிறது. ஒரு விநாடிக்கு ஒரு ரிங்கிட் என்று எண்ணினால் ஒரு மணி நேரத்தில் 3600 ரிங்கிட்டுகள் எண்ண முடியும்.

ஒரு நாளைக்கு 86400 ரிங்கிட்டுகள். ஒரு வருடத்தில் 31536000 ரிங்கிட்டுகள். ஆக இருபதாயிரம் கோடி ரிங்கிட்டை எண்ணுவதற்கு 6341 வருடங்கள் வருகின்றன.

இந்தக் கணக்கு தேவைதானா என்று கேட்பது தெரிகிறது. இருந்தாலும் பாருங்கள். ஒரு காரியத்தில் இறங்கியாகிவிட்டது. பில்கேட்ஸைப் போல நாமும் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் அல்லவா?

காந்திஜியின் நோபல் பரிசு

3YoungGandhiமகாத்மா காந்தியைப் பற்றி தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க முடியாது. ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவர். சாமான்ய மனிதராக வாழ்ந்தவர். ஆசாபாசங்களை அடக்கி உயர்ந்தவர். மனிதக் கோபுரத்தில் புனித தெய்வமாக மறைந்தவர். மண்ணில் மனிதன் மறையும் வரையில் அந்த ஆத்மாவின் சுவடுகள் நிலைத்து நிற்கும்.

அவர் மறைந்த போது உலகில் சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டன. பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு மரியாதை செய்தன. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அமைதிச் சின்னமாக மதிக்கப்படும் மகாத்மா மறைந்து அறுபது ஆண்டுகளாகிவிட்டன.
தணிக்கை அறிக்கைகள்
சரி! அப்பேர்ப்பட்ட ஒரு மனிதருக்கு மட்டும் நோபல் பரிசு ஏன் கொடுக்கப்படவில்லை. எத்தனையோ காமா சோமாக்களுக்கு கொடுத்து உச்சி முகர்ந்து பார்த்திருக்கிறார்கள்.
ஒருக்கால் மகாத்மா அந்தப் பரிசுக்கு அப்பாற்பட்ட மனிதராகத் தெரிந்திருக்கலாம். அல்லது அவருக்கு இந்தப் பரிசைக் கொடுத்து ஏன் நோபல் பரிசின் தகுதியை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, நியாயப்படி கொடுக்கப்பட வேண்டிய ஒருவருக்கு கொடுக்க'மறந்து' விட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மகாத்மா காந்திக்குக் நோபல் பரிசு கொடுக்கப்படாதது பெரிய அதிசயம். பலர் பலவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள். இந்தியப் பத்திரிகைகள் பல கண்டனக் கட்டுரைகளையும் எழுதின. உருப்படியான காரணங்கள் கிடைக்கவில்லை.

இருப்பினும் நோபல் பரிசு காப்பகத்திலிருந்து தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் ஆவணங்களிலிருந்து கசக்கிப் பிழியப்பட்ட சில தகவல்கள் இங்கே உங்களுக்காக வழங்கப்படுகின்றன. படியுங்கள். நியாயத்தைச் சொல்லுங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுகள் பௌதீகம், இரசாயனம், மருத்துவம்,இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற ஆறு துறைகளில் கொடுக்கப்படும். உலகில் தலைசிறந்த மனிதர்கள், மேதைகள், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் நோபல் பரிசு தேர்வுக் குழுவினருக்கு பரிந்துரைக்கப்படும்.

2அந்தப் பெயர்களைத் தேர்வுக் குழுவினர் பரிžலனை செய்வார்கள். அதன் பின்னர் மேற்சொன்னத் துறைகளில் ஒரு துறைக்கு ஒருவர் வீதம் ஆறு துறைகளுக்கும் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பார்கள். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு பரிசும் முப்பத்தைந்து இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ளது. இந்தியாவிற்கு நான்கு முறை கிடைத்திருக்கிறது. ரபீந்தரநாத் தாகூர் (இலக்கியம்-1913) சர் சி.வி.ராமன் (இயற்பியல்- 1930) அன்னை திரேசா (அமைதி-1979) அமிர்தயா சென் (பொருளாதாரம்-1998). இதைத் தவிர1983ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் சந்திரசேகருக்கு இயற்பியல் துறையில் கிடைத்திருக்கிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்பவர் நைட்ரோ கிலிசரின் எனும் அமிலத்தைப் பயன்படுத்தி வெடிமருந்து கண்டுபிடித்து ஒன்றாம் நம்பர் பணக்காரரானார்.

வெடிமருந்துகளைப் பயன்படுத்திச் சுரங்கப்பாதைகள் செய்து பெரிய பெரிய பாலங்களைக் கட்டினார். சுவீடனில் ஒரு பயங்கரமான ஆயுதத் தொழிற்சாலையையும் கட்டினார். அதன் பெயர் போபர்ஸ்.

இந்தத் தொழிற்சாலைதான் 1980களில் இந்தியாவில் ஒரு லஞ்ச களேபரத்தையே உண்டாக்கிவிட்டு போனது. இந்திய இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதாகச் சொல்லி காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சத்தை வாங்கி வந்தார்கள். மாபெரும் மண்டைகள் உருண்டு போயின.

மனுக்குல நன்மைக்கு
4Gandhi_and_Indira_1924உலகம் முழுமையும் 90 வெடிமருந்து தொழிற்சாலைகளை ஆல்பிரட் நோபல் வைத்திருந்தார். அதனால் பின் நாட்களில் பல்லாயிரம் உயிர்கள் பலியாகின. மனம் வேதனையடைந்த அவர் அதற்குப் பரிகாரமாக தன் சொத்தில் பெரும்பகுதியை மனுக்குல நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று உயில் எழுதினார்.

27 நவம்பர் 1895ல் எழுதிய அந்த உயிலில் தன் சொத்துகளை நோபல் அறவாரியம் பராமரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு வருடம் கழித்து இறந்தும் போனார். இராசயனம், பௌதீகம்,இலக்கியம் ஆகிய மூன்று துறைகளையும் அரச சுவீடன் அறிவியல் கழகம் கவனித்துக் கொள்கிறது.

5Gandhi_with_Tagore_Shantiniketan_1940நார்வே நாட்டின் காரோலின்ஸ்கா ஆய்வுக்கழகம் மருத்துவத் துறையைக் கவனித்துக் கொள்கிறது. அமைதித் துறையை நார்வே நாடாளுமன்றக் குழுமம் கவனித்துக் கொள்கிறது.

1960 ஆம் ஆண்டு அல்பர்ட் லூதுலி எனும் ஆப்ரிக்க போராட்டவாதிக்கு அத்தி பூத்தாற் போல அமைதிக்கான நோபல் பரிசைக்கொடுத்தார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஐரோப்பாவைத் தவிர வேறு நாட்டவருக்கு கொடுக்கப்பட்டது அதுதான் முதல் தடவை.

அதுவரை நோபல் அமைதிப் பரிசு என்பது ஐரோப்பியர்களின் தாத்தா பாட்டன் - மாமன் மச்சான் சொத்தாகவே இருந்தது. 1964 ஆம் ஆண்டு கொஞ்சம் இறங்கி வந்து, மார்ட்டின் லூதர் கிங் எனும் கறுப்பின போராட்டவாதிக்கு கொடுத்தார்கள்.

7gandhiph1ஜெர்மன் அதிபர் வில்லி பிராண்ட் (1971), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கீசிங்கர் (1973), வட வியட்நாமிய அதிபர் லீ டக் தோ (1973), ஜப்பானிய பிரதமர் இசாக்கு சாத்தோ (1974),இஸ்ரேலிய பிரதமர்கள் மினாசெம் பெகின் (1978) சைமொன் பெரெஸ் (1994) இட்சாக் ராபின் (1994), எகிப்திய அதிபர் அன்வார் சடாட் (1978), அன்னை திரேசா (1979), போலந்து நாட்டின் தொழிற்சங்கத் தலைவர் வாலேசா (1983), தென் ஆப்ரிக்கப் பாதிரியார் டெஸ்மாண்ட் தூதூ (1984), அங் சான் சுகி (1991),பாலஸ்தீனப் பிரதமர் யாசிர் அராபாட் (1994), ஈரானிய போராட்டவாதி சிரின் எபாடி (2003) போன்றவர்களுக்கு அமைதிப் பரிசைக் கொடுத்- திருக்கிறார்கள். 2004ல் வாங்காரி மாத்தாய் எனும் கென்யா பெண்மணிக்கு கொடுத்தார்கள்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனானுக்குகூட 2001ல் கொடுத்திருக்கிறார்கள். அதைவிட இன்னொரு படி மேலே போய், இறந்து போன இரண்டாவது ஐ.நா. பொதுச் செயலாளர் டெக் ஹாமர்சால்ட்டிற்கு 1961லேயே கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு மிக அண்மையில் நெல்சன் மண்டேலாவுக்குக் கொடுத்தார்கள்.

பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் உறவுகள்
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவருமே மகாத்மாவைத் தங்களுடைய குருவாக ஏற்றுக் கொண்டவர்கள். அவரைத் தெய்வமாக நினைத்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் உள்ளனர்.

ஆனால், அவர்களின் ஆத்மீக குருவிற்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. இவர்களைவிட காந்தி எதில் குறைந்து போனார் என்பதுதான் நம்முடைய கேள்வி.

சரி, என்ன காரணம். நார்வே நோபல் செயற்குழுவின் மனப்பான்மை குறுகிப் போனதா? இல்லை ஐரோப்பியர் அல்லாதவர்களின் விடுதலை உணர்வுகளை ஜரணிக்க முடியவில்லையா?

8gandhiஇல்லை இங்கிலாந்துக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே உள்ள பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் உறவுகள் பாதிக்கப்படும் என்ற பயந்தாங்கொள்ளித் தனமா?இப்படிப்பட்ட கேள்விகள் எழவே செய்கின்றன.

'பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்துக் கொடுத்ததால் இனக்கலவரம் ஏற்பட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான பேர் மாண்டு போயினர். ஆக, பல ஆயிரம் உயிர்கள் பலி போனதற்கு காரணமாக இருந்தவருக்கு எப்படி அமைதிக்கான பரிசைக் கொடுப்பது' என்று தேர்வுக் குழுவினர் கேட்கிறார்கள்.

'அமைதிக்குத்தான் பரிசு கொடுக்கப்படுகிறது. அமைதி என்ற பெயரில் நடந்தவற்றில் அமைதியின்மை இருந்ததால் அங்கே அமைதி அடிபட்டு போகிறது. ஆகவே, அமைதி இல்லாத ஒன்றுக்கு அமைதி பரிசைக் கொடுப்பதில் நியாயமில்லை' என்கிறார்கள்.

'இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்த வரையில் சரி. ஆனால், பிரித்துக் கொடுத்த பின் ஏற்பட்ட கலவரத்தில்தான் அமைதிப் பிரச்னை ஏற்பட்டது. அமைதியே இல்லாமல் போய்விட்டது. ஆகவே, காந்திக்கு நோபல் பரிசு கொடுப்பதில் இடைஞ்சல் ஏற்பட்டது' என்று தேர்வுக் குழுவினர் வாதிடுகின்றனர்.

இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகிறன. ஆகா! எப்பேர்ப்பட்ட தத்துவார்த்த, வெள்ளைக்கார உண்மைகள்.

இந்தியாவின் தோழர்கள்
9jb05824சரி, விஷயத்திற்கு வருவோம். 1930களில் காந்திஜிக்கு ஆதரவான பல அறவாரியங்கள் உலகம் எங்கும் தோன்றின.

அவற்றிற்கு 'இந்தியாவின் தோழர்கள்' என பெயரிட்டு அழைத்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறைய கிளைகள் இருந்தன. அந்த வகையில் நார்வேயிலும் ஒரு கிளை உருவானது.

அதற்கு ஒலே கோல்சென் என்பவர் தலைவராக இருந்தார். அவர் தொழிற் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். 1937ல் காந்திஜியின் பெயரை நோபல் பரிசு தேர்வுக் குழுவிற்கு முதல் முறையாக அனுப்பினார். ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

'காந்திஜியின் கொள்கைகளில் கூர்மையான திருப்பு முனைகள் உள்ளன. ஒரு கட்டத்தில் விடுதலை வீரராக இருக்கிறார். மறுகணம் சர்வாதிகாரி போல தோன்றுகிறார். ஒரு கட்டத்தில் கொள்கைவாதியாக இருக்கிறார்.

மறுகணம் தேசியவாதியாக மாறுகிறார். மதம் மாறியது போல பேசுகிறார். திடீரென்று சாதாரண அரசியல்வாதியாகிறார்' என்று சொல்லப்பட்டு நியமனம் நிராகரிக்கப்பட்டது.
ksmuthukrishnan11Mahatma_gandhi_and_Jinnahஅனைத்துல ரீதியில் காந்திஜிக்கு சில எதிர்ப்புகள் இருக்கவே செய்தன. 'காந்திஜி தொடர்ந்தாற் போல அகிம்சாவாதியாக இருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பிரிட்டிஷாருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் நியாயமானதுதான்.

இருந்தாலும் பயங்கரமான வன்முறைகள் நடந்துள்ளன. 1920-1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம். மத்திய பிரதேசத்தில் சவுரி சவுரா எனும் இடத்தில் நடந்த சம்பவம்.

ksmuthukrishnan12Mahatma_Gandhi_With_Charlie_Chaplinபேரணியில் கலந்து கொண்டவர்கள் போலீஸ் நிலையத்தைத் தாக்கி பல போலீஸ்காரர்களைக் கொன்றனர். அப்புறம் அந்த போலீஸ் நிலையத்தையே எரித்துவிட்டனர்.

அந்தப் பேரணியைத் தூண்டிவிட்டவருக்கு எப்படி நோபல் பரிசு கொடுப்பது' என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நோபல் பரிசு தேர்வுக் குழுவின் ஆலோசகராக Jacob Worm-Muller என்பவர் இருந்தார். அவர் காந்திஜியின் பெயரை நிராகரிக்கும் போது 'இவர் இந்திய தேசியவாதியாகவே அதிகம் தெரிகிறார். தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்காக மட்டுமே போராடியிருக்கிறார்.

இந்தியர்களைவிட மிக மோசமான நிலையில் வாழ்ந்த கறுப்பர்களின் வாழ்க்கை நிலையை நினை த்துப் பார்க்கவில்லை. அதனால் 1937 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை Lord Cecil of Chelwood என்பவருக்குக் கொடுக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்.

ஐந்து முறை காந்திஜியின் பெயர்
ksmuthukrishnan14gandhi3முதலாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் ஒற்றுமைக்காக ஒர் ஒன்றியம் அமைக்கப்பட்டது. அதன் பெயர் 'லீக் ஆப் நேஷன்ஸ்'.

அந்த ஒன்றியத்தின சட்ட திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்தவர்தான் இந்த லார்ட் செசில். ஓர் ஆங்கிலேயர்.1919ல் அவர் எழுதிய கடிதத்திற்கு 1937ல் கொடுத்தார்கள்.

காந்திஜியின் பெயரை அமுக்கிவிடலாம் என்பதற்காக இதைச் செய்திருக்கலாம். இல்லையா. இப்படியும் பார்க்க வேண்டும். 1937, 1938, 1939, 1947, 1948 ஆண்டுகளில் காந்திஜியின் பெயர் நோபல் பரிசுக்கு முன் மொழியப்பட்டுள்ளது. மூன்று முறை இறுதிச் சுற்றுக்கும் வந்தது. ஆனால், ஒரு முறைகூட தேர்வு பெறவில்லை.

1947 ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்கான நியமனம் இந்தியாவிலிருந்து வந்தது. அதை பம்பாய் கவர்னர் பி.ஜி.கெர், ஐக்கியப் பிரதேச முதல்வர் கோவிந்த் பல்லாபந்த், இந்திய சட்டசபைத் தலைவர் மாவலங்கார் ஆகியோர் காந்தியின் பெயரைத் தாக்கல் செய்திருந்தனர்.
அத்துடன் மேலும் ஐவர் பெயர்களும் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ksmuthukrishnan15MahatmaGandhi_4தேர்வுக்குழுவில் ஐவர் இருந்தனர். அனைவருமே நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில்Herman Smitt Ingebretsen என்பவரும் Christian Oftedalஎன்பவரும் 1947 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசை காந்திஜிக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றனர்.

ஆனால், தேர்வுக்குழுவில் எஞ்சிய மார்டின் டிரான்மல்,பிகர் பிராட்லண்ட், குன்னர் ஜான் மூவரும் மறுத்தனர். இந்த மூவரில் ஒரே ஒருவர் மட்டும் அந்தப் பக்கம் சாய்ந்திருந்தால் சரித்திரமே வேறு மாதிரி போயிருக்கும். என்ன செய்வது.

காந்திஜிக்கு அதிர்ஷ்டம் இல்லையா இல்லை அவரை நம்பிய உலகத்திற்கு அதிர்ஷ்டம் இல்லையா. புரியவில்லை.

நீதி நெறிமுறைகளுக்கு ஒத்து வராமல்
இந்த மூவரும் மறுத்ததற்கு காரணம் இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி நிலைமைதான். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்தது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் 1947 செப்டம்பர் 27 ஆம் தேதியில் அனுப்பிய செய்தி.

'பாகிஸ்தான் தனியாக ஒரு தரைப்படை, ஒரு கப்பற்படை, ஒர் விமானப்படை வேண்டும் என்று கேட்கிறது. இருக்கும் இந்திய இராணுவத்திலிருந்துதான் வர வேண்டும் என்கிறது.

16Tagore_Gandhi
ஆகவே, நீதி நெறிமுறைகளுக்கு ஒத்து வராமல் முரண்டு செய்தால் இந்தியாவிற்கு வேறு வழியில்லை. போருக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படலாம்' என்று வேதனைப் பட்டு காந்தி சொல்கிறார்.

இந்தச் செய்தியை அந்த மூவரும் ஒரே உடும்பு பிடியாய்ப் பிடித்துக் கொண்டனர். ஒர் அமைதி விரும்பி போரைப் பற்றி பேசவே கூடாது. அவருக்கு அமைதிப் பற்றைவிட நாட்டுப்பற்று மேலோங்கி நிற்கிறது என்று முடிவு செய்தனர்.

அதனால், 1947 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை'குவாக்கர்ஸ்' என்றழைக்கப்பட்ட அமெரிக்கத் தோழமைக் கழகத்திற்கு கொடுத்தனர். இரண்டாவது முறையும் நோபல் பரிசு காந்திஜிக்கு கிடைக்காமல் போனது.

1948 ஆம் ஆண்டு ஒரு தமிழர், காந்தியின் பெயரை நோபல் தேர்வு குழுவிற்கு முன்மொழிந்தார். யார் அந்தத் தமிழர். அவர்தான் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன்.

நோபல் பரிசு பெற்ற 'ராமன் விளைவு' பற்றி நாம் எல்லோரும் அறிவோம். உலகமே வியந்து பாராட்டிய Raman Effectsகண்டுபிடிப்பை 'ராமன்-கிருஷ்ணன்' விளைவு என்றுதான் அழைக்க வேண்டும்.

132005052901681602அந்தக் கண்டுபிடிப்பை சர்.சி.வி.ராமனும் கிருஷ்ணனும்தான் சேர்ந்து கண்டுபிடித்தார்கள். இருந்தாலும் பெரிய மனசு படைத்து கூட்டாளி தர்மத்தில் ராமனுக்கு விட்டுக் கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணன். அதன் விளைவாக சர் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

உலகில் பலருக்கு இந்த விஷயம் தெரியும். சிலருக்குத் தெரியாது. மேற்கு நாடுகளில் இன்றும் 'ராமன் கிருஷ்ணன்'விளைவு என்றுதான் அழைக்கிறார்கள். கிழக்கில்தான் 'ராமன் விளைவு' என்று அழைத்து வருகிறோம்.

மாபெரும் உதாரணப் புருஷராய் விளங்கிய டாக்டர் கிருஷ்ணன், மகாத்மாவின் மானžžடராய் வாழ்ந்தும் காட்டியவர். இந்திய இயற்பியல் (Physics) ஆய்வுக்கூடத்தின் இயக்குநராய்ப் பணியாற்றியவர்.

டாக்டர் கிருஷ்ணன் மறைந்த பிறகு அவருடைய ஆவணங்கள் புதுடில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனில் இருக்கும் நேரு நினைவு நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டு, இன்று வரையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கத்தியின்றி ரத்தமின்றி
nathuram-godse-and-mahatma-gandhi-rare-real-unseen-picture-before-assassination
1947 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தவர். மகாத்மா காந்திக்கு உலகின் மிகப் பெரிய விருதான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அமைதியாக முயற்சிகளை செய்து வந்தவர். காந்திக்கு இந்த விஷயம் தெரியாது.

நார்வே நோபல் பரிசு தேர்வுக் குழுவில் டாக்டர் கிருஷ்ணனின் நண்பர் ஒருவரும் இருந்தார். அவருக்கு கடிதம் எழுதினார்.

அந்த நண்பர் காந்திஜி பற்றிய சிறப்புச் செய்திகளைத் தயாரித்து ராஜாஜிக்கு அனுப்பி வைத்தார். படித்துப் பார்த்த ராஜாஜி அவற்றை டாக்டர் கிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர், அந்தக் குறிப்புகள் தேர்வுக் குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், பரிசு கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா? முதலில் சொன்னேனே... ராய்டர்ஸ் நிறுவனத்தின் செய்திகள் தப்பாக வியாக்கியானம் செய்யப்பட்டன என்று.

அதே பிரச்னைதான். இருந்தாலும் டாக்டர் கிருஷ்ணன் மனம் தளரவில்லை. எப்படியாவது காந்திக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

1948 ஆம் ஆண்டிற்கான பரிசை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று முயற்சியும் செய்தார். இந்தியா விடுதலை பெற்ற நேரம் அது. இந்தியாவின் விடுதலை குறித்து உலகமே மூக்கில் விரலை வைத்த நேரம். கத்தியின்றி ரத்தமின்றி சாணக்கியம் செய்து வாங்கிய விடுதலை.

மகாத்மாவின் அகிம்சாக் கொள்கையை உலகச் சமுதாயம் அங்கீகரித்த காலக்கட்டம். நோபல் பரிசு தேர்வுக் குழுவினரும் அந்த ஆண்டிற்கான அமைதிப் பரிசை மகாத்மாவிற்குக் கொடுக்க முடிவும் செய்திருக்கலாம்.

ஆனால், விதி விளையாடிவிட்டது. 1948 ஜனவரி மாதம் 30ஆம் தேதி மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த ஆண்டு காந்தியின் பெயரை நியமனம் செய்து தேர்வுக் குழுவினருக்கு ஆறு கடிதங்கள் வந்தன. அதில் இரண்டு ஏற்கனவே நோபல் பரிசு பெற்றவர்களின் கடிதங்கள். எமிலி கிரீன் என்பவர் ஒருவர். இருந்தாலும் கிடைக்கவில்லை.

மகாத்மா இறந்து போனாலும் Posthumous Nomination என்று அவருடைய பெயரில் கொடுத்திருக்கலாம். அதிலும் சில இடைஞ்சல்கள் இருக்கவே செய்தன.
gransonஅப்படியே பரிசைக் கொடுத்தாலும் யாரிடம் கொடுப்பது. உயிரோடு இருந்திருந்தால் நேரடியாகக் கையில் கொடுக்கலாம். அவர்தான் உயிரோடு இல்லையே.

மகாத்மா எந்த ஒரு கழகத்தையும் சார்ந்தவர் இல்லை. அவர் பெயரில் எந்த சொத்தும் இல்லை. எந்த உயிலும் இல்லை. எந்த ஒரு வங்கிக்கணக்கும் இல்லை.

ஆக, அந்தப் பரிசுப் பணத்தை யாரிடம் கொண்டு போய் கொடுப்பது, சேர்ப்பது என்று தேர்வுக் குழுவினர் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.

கடைசியில் கொடுக்கப் படாமலேயே போனது. பின்னர் அந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்குப் பொருத்தமான நபர் உலகில் யாரும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு யாருக்கும் பரிசு கொடுக்கப்படவில்லை என்பதை மறுபடியும் நினைவு படுத்துகிறேன்.

பொருத்தமான நபர் யாரும் இல்லை
'பொருத்தமான மனிதர் இல்லை' என்று சொன்னார்களே இதில் ஒரு சந்தேகம் இருந்தது. அப்போது பாலஸ்தீனத்திற்கு ஐ.நா பிரதிநிதியாக கவுண்ட் பெர்னாடோதே என்பவர் இருந்தார். அவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

அவருக்கு கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு காந்திஜிக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். மூடு மந்திர வேலை நடந்திருக்கலாம் எனும் சந்தேகம் இருக்கவே செய்தது. இருந்தாலும் பெர்னாடோதேவின் பெயர் முன்மொழியப்படவில்லை என்பது தெரிய வந்ததும் தேர்வுக் குழுவினர் நியாயமாகவே நடந்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

ஆக, காந்தி இன்னும் ஓர் ஆண்டு உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு பரிசைக் கொடுத்திருப்பார்கள்.

1989 ஆம் ஆண்டுக்கான அமைதிப் பரிசை புத்த சமயவாதி டாலாய் லாமாவிற்கு கொடுத்தார்கள். அப்போது டாலாய் லாமா சொன்னார். 'இந்தப் பரிசை மனிதச் சமுதாயத்தின் அமைதிச் சின்னமான மகாத்மாவின் நினைவாக வாங்கிக் கொள்கிறேன்' என்றார்.

ஆனால், ஒன்றை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். மகாத்மாவின் பிள்ளைகள் ஹரிலால், மணிலால்,ராம்தாஸ், தேவதாஸ் ஆகிய நால்வரும் அந்தச் சமயத்தில் உயிருடன் தான் இருந்தார்கள். ஹரிலால் குடித்து குடித்து வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்.

காந்தி இறந்து போன பிறகு சில மாதங்களில் அவரும் இறந்து போனார். இவர்களில் தேவதாஸ் மட்டுமே மகாத்மாவுடன் கடைசி வரை இருந்தார்.

அவருக்காவது அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கலாம். 1976ஆம் ஆண்டு கணக்குப்படி மகாத்மாவின் வழி வந்தவர்கள்47 பேர் உலகில் ஐந்து நாடுகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உலகை இயங்க வைக்கும் இயற்பியல் விதிகளில் இரண்டை கண்டுபிடித்த தமிழர்கள் இருவருக்குமே நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த அறுபது வருடங்களாக எந்தத் தமிழருக்கும் கிடைக்கவில்லை.

மறுபடியும் யாருக்காவது கிடைக்க வேண்டும். வேண்டிக் கொள்வோம்.